Kathir News
Begin typing your search above and press return to search.

மும்பை 60 மாடி இரட்டை கோபுரத்துக்குள் நுழைந்த ரஷ்ய நாட்டினர் - போலீசார் தீவிர விசாரணை

மும்பையில் உள்ள 60 மாடி இரட்டை கோபுர கட்டிடத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய நாட்டினர் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை 60 மாடி இரட்டை கோபுரத்துக்குள் நுழைந்த ரஷ்ய நாட்டினர் - போலீசார் தீவிர விசாரணை

KarthigaBy : Karthiga

  |  28 Dec 2022 1:45 PM GMT

மும்பை தார்டுதேவ் பகுதியில் 60 மாடிகளைக் கொண்ட 'தி இம்பீரியல்' என்ற இரட்டை கோபுர கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மிகப்பெரும் பணக்காரர்கள் முக்கிய நபர்கள் வசித்து வருகின்றனர். இதனால் இந்த இரட்டை கோபுரம் எப்போதும் பாதுகாவலர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும். இருப்பிடம் நேற்று முன்தினம் எப்படியோ இந்த கட்டிடத்துக்குள் மர்ம நபர்கள் இரண்டு பேர் நுழைந்து விட்டனர். இதை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் காவலாளிகள் பார்த்தனர். மர்மநபர்கள் படிக்கட்டு வழியாக மேல்மாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.


உடனடியாக காவலாளிகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்தவுடன் இரண்டு பேரும் 28 வது மாடியில் இருந்து கீழே ஓடி வந்தனர். அவர்கள் ஐந்தாவது மாடிக்கு வந்தவுடன் அங்கு இருந்து அருகில் உள்ள மலைப்பகுதியில் குதித்தனர். அப்போது அவர்களுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டது எனினும் ஒருவர் அங்குள்ள காட்டுப்பகுதியில் நுழைந்து ஒளிந்து கொண்டார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் காட்டில் ஒளிந்த நபரை வெளியே வந்து சரணடையுமாறு ஒலிபெருக்கியில் எச்சரித்தனர். இதை அடுத்து அவர் போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவத்தால் இரட்டைக் கோபுரம் கட்டிட பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பிடிபட்ட இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது கட்டிடத்திற்குள் நுழைந்தவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யூ-டியூப் பிரபலங்கள் மாக்சிம் ஷெர்பகோவ், ரோமன் புரோசின் என்பது தெரிய வந்தது.


இவர்கள் சாகசத்தில் ஈடுபட 60 மாடி கட்டிடத்திற்கு நுழைந்ததும் தெரியவந்தது. படிக்கட்டு வழியாக கட்டிடத்தில் 58 வது மாடி வரை சென்று அங்கு இருந்து வெளிப்பகுதி வழியாக கீழே இறங்கி சாகசத்தில் ஈடுபடவும் அதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட திட்டமிட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரஷ்யா நாட்டு யுடியூபர்கள் இரண்டு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாடப்படும் வேளையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மும்பையில் உள்ள 60 மாடி இரட்டை கோபுரத்துக்குள் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News