Kathir News
Begin typing your search above and press return to search.

சிறை கைதிகளுக்கு ஆயுதம்: உக்ரைனில் அதிகரிக்கும் கொள்ளை, பாலியல் குற்றங்கள்!

சிறை கைதிகளுக்கு ஆயுதம்: உக்ரைனில் அதிகரிக்கும் கொள்ளை, பாலியல் குற்றங்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  2 March 2022 1:36 PM GMT

உக்ரைனில் உள்ளவர்கள் அனைவரின் கைகளிலும் ஆயுதங்களை வழங்கியிருப்பதால் பாலியல் குற்றங்கள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த 7வது நாளாக போர் தொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைன் அரசு முழு ராணுவ பலத்துடன் மோதினாலும், ஆட்கள் பற்றாக்குறையால் சிறை கைதிகளையும் விடுவித்து போரில் ஈடுபட வைத்துள்ளது.

இது போன்றவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடும் போது எளிதாக குற்றங்களை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிப்பது மற்றும் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவதாக வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் அந்நாட்டு பெண்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அச்சமடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News