Kathir News
Begin typing your search above and press return to search.

செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2000 ரூபாய் வைத்து இருப்பவர்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது - ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  20 May 2023 9:15 AM GMT

பிரதமர் மோடி 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி திடீரென டி.வி.யிலௌ தோன்றி பேசி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் படி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது . இந்த நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது . ஆனால் அப்போது பொதுமக்கள் வங்கிகளிலும் ஏ.டி.எம் மையங்களிலும் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை செலுத்தி மாற்றிக்கொள்ள கடும் சிரமங்களை அனுபவித்தனர்.


மணிக்கணக்கில் வரிசையில் காத்து நின்றனர். அந்த நேரத்தில் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து மறைந்து வந்தது. சாதாரணமாக 2000 ரூபாய் நோட்டை பார்ப்பது அரிதாகி போய்விட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 28- ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கை 2000 ரூபாய் நோட்டு பிறகும் குறைந்து வருவதை படம் பிடித்து காட்டியது.


அதில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாட்டில் 274 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் 2021 மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 245 கோடி ஆகும் 2022 மார்ச் மாதம் 214 கோடியாகவும் குறைந்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் இருந்தே ஏ.டி.எம் மையங்களில் 2000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது .அதுமட்டுமின்றி 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது 2018 - 19 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் சற்று எதிர்பாராத நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 30 - ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


2000 ரூபாய் நோட்டு புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள முடியும். 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.


நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாரத ரிசர்வ் வங்கி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது . பெருமளவில் பதுக்கி உள்ளதாக நம்பப்படுகின்ற 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே கொண்டு வரச் செய்யும் வகையில் தான் இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News