Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்ப அமெரிக்க முடிவு: காரணம் என்ன?

உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது.

உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்ப அமெரிக்க முடிவு: காரணம் என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Jan 2023 5:42 AM GMT

கிரீமியாவை தொடர்ந்து உக்க உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியும் ஆக்கிரமித்து ரஷ்யா திட்டமிட்டு இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நோட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட உக்ரைன் முடிவு எடுத்தது. ஆனால் இதில் கொந்தளித்துப் போன ரஷ்யா உக்ரையின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது .உலகமே எதிர்பார்க்காத நிலையில் இந்த போர் கடந்த 11 மாதங்களாக நீடித்து இருக்கிறது.


இன்னும் வல்லரசு நாடான ரஷ்யாவில் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தற்போது பக்கப்பலமாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடி உக்கரை ரஷ்யா முயற்சிகளால் வெல்ல முடியவில்லை. தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்று உக்கரை வலியுறுத்தி வருகிறது.


ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவுகளை உக்ரைன் அதிபர் வரவேற்று இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், இந்த வெற்றியின் பாதைக்கு மிக முக்கியமான பரிகாரம் இருக்கிறது. இன்று சுதந்திர உலகம் ஒரு பொதுவான குறிக்கோளுக்காக உக்ரைனின் விடுதலைக்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்று பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News