Kathir News
Begin typing your search above and press return to search.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உக்ரைன் பெண் எம்.பி., பரபரப்பு தகவல்!

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உக்ரைன் பெண் எம்.பி., பரபரப்பு தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  4 April 2022 1:44 PM GMT

ரஷ்ய படைகள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவர்களின் உடல்களில் சில அடையாளங்களை குத்தியுள்ளதாக உக்ரைன் பெண் எம்.பி. குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களையும் கடந்து போர் நடைபெற்று வருவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய படைகள் அப்பாவி மக்களை கொலை செய்து வருவதாகவும், போர் விதிகளை மீறுவதாகவும் உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டி வந்தார்.

இந்நிலையில், உக்ரைன் பெண் எம்.பி. லெசியா வாசிலென்க் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்ய வீரர்கள் கொள்ளையடிக்கின்றனர், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். சில நேரங்களில் கொலையும் செய்கின்றனர். இதில் 10 வயது சிறுமிக்கு கூட மலக்குடல் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ரஷ்ய படைகள்தான் செய்துள்ளது எனவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News