Kathir News
Begin typing your search above and press return to search.

சசிதரூர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை ! - டெல்லி சிறப்பு கோர்ட் !

சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சசிதரூர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை ! - டெல்லி சிறப்பு கோர்ட் !

G PradeepBy : G Pradeep

  |  18 Aug 2021 10:37 AM GMT

காங்கிரஸ் மூத்த தலைவரான சசிதரூர் எம்.பி. தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் இருவரும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். அப்போது சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவர் வி‌ஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் தீவர விசாரணை நடத்தினார்கள். சுனந்தா புஷ்கரை சசிதரூர் கொலை செய்துவிட்டதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது சம்பந்தமாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதி கீதாஞ்சலி கோயல், சசிதரூர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News