Kathir News
Begin typing your search above and press return to search.

மாதம் ரூ.1411 முதலீடு முடிவில் 33.40 லட்சம் முதிர்வு தொகையாக பெற கைகொடுக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம் - பெறுவது எப்படி?

அஞ்சலக சேமிப்புத் திட்டத்தின் மூலம் இந்தத் திட்டத்தில் முதிர்வு தொகை தொகையாக 58 வயதில் 33.40 லட்சம் பெறலாம்.

மாதம் ரூ.1411 முதலீடு முடிவில் 33.40 லட்சம் முதிர்வு தொகையாக பெற கைகொடுக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம் - பெறுவது எப்படி?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Jun 2022 11:41 PM GMT

அஞ்சலகங்களில் கிடைக்கும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக கிராம் சுரக்ஷா திட்டம் இருந்து வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பெறக்கூடிய சிறந்த திட்டமாக இந்த திட்டம் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும் இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டின் இறுதியில் அதிக லாபத்தைப் பெற கூடிய ஒரு திட்டமாக அமைந்துள்ளது. புதிய காலத் திட்டங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் சிறந்த திட்டமாகும் இருக்கிறது.


சுரக்ஷா யோஜனா திட்டம் ஒருவர் மாதம் ₹. 1411 முதலீடு செய்து மற்றும் முதிர்வு காலத்தில் சுமார் 35 ஆயிரம் லட்சம் பெறக்கூடிய ஒரு திட்டமாக இது அமைந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கடைசி காலத்தில் நீங்கள் சுமார் ரூ.35 லட்சம் பெற முடியும். இந்தத் திட்டத்தில் பங்கு பெற குறிப்பாக நீங்கள் 19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இதில் 10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம் காப்பீட்டு தொகையாக ₹. 10,000 மற்றும் அதிகபட்ச தொகை ₹ 10 லட்சம் ஆகும் கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் பாலிசி காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தை செலுத்திக் கொண்டு அதனை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


19-55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர் ஒவ்வொரு மாதம் ரூ.1515 பிரீமியமாகச் செலுத்த வேண்டும். 58 வயது வரை முதலீடு செய்ய அவர் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 60 வயது வரை, முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் கடைசியாக 58வது வயதில் நிறைவில் 33.40 லட்சமாக நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News