Kathir News
Begin typing your search above and press return to search.

உடுமலை: வீட்டில் கழுத்து அறுபட்டு இருந்த நிலையில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி இறப்பு!

வீட்டில் கழுத்து அறுபட்டு இருந்த நிலையில் பதினோராம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கொலை வழக்கில் போலீசார் விசாரணை.

உடுமலை: வீட்டில் கழுத்து அறுபட்டு இருந்த நிலையில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி இறப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 March 2022 1:55 AM GMT

உடுமலையில் உள்ள சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, நேற்று கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டிற்குள் இறந்து கிடந்தார். பின்னர், வேலைக்கு சென்றிருந்த பெற்றோர்கள் வீடு திரும்பி வந்து பார்த்த போது மாணவி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்கப்பட்ட மாணவி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


அங்கு முதலுதவிக்குப் பின், கோவை அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உடல் நிலை மோசமானதால், மீண்டும்உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், வரும் வழியிலேயே மாணவி இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதனிடையே, மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை தொடர்ந்து, கொலை வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு நடைபெற்றது. கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் மாணவியை கொலை செய்வதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News