Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உட்பட நான்கு பெயர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Sep 2022 3:30 AM GMT

பழனி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். உண்மையில் இந்த சமூகம் குறித்த மாணவிகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த சம்பவம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் இது பற்றி புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.


அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிரவு சாரணை நடத்தினார்கள். விசாரணையில் பழனி சத்திய நகரைச் சேர்ந்த ராகுல் மற்றும் பரமானந்தம், கிருபாகரன் மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் ஆகியோர்தான் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளுக்கும் கொடுத்தனர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நாலு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்த அவர்களை கைது செய்தனர்.


பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையே பணியின் அலட்சியமாக இருந்த காப்பாளர் அமுதா, காவலாளி விஜயா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நலச்சங்கம் அலுவலர் சண்முகம் உத்தரவிட்டார். பழனியில் பள்ளி மாணவிக்கு பாலில் கொடுத்து வழக்கு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Input & Image courtesy: Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News