Kathir News
Begin typing your search above and press return to search.

உயிர் பலியை அதிகரிக்க செய்யும் 'செல்பி'- தண்டவாளம் அருகே பலியான இரு வாலிபர்கள்

திருப்பூரில் தண்டவாளம் அருகில் நின்று செல்பி எடுத்த இரண்டு வாலிபர்கள் ரயிலில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிர் பலியை அதிகரிக்க செய்யும் செல்பி- தண்டவாளம் அருகே  பலியான இரு வாலிபர்கள்

KarthigaBy : Karthiga

  |  3 July 2023 12:00 PM GMT

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளை பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் இரண்டு பேர் ரெயில் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு நின்ற வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரயில் மோதி இறந்த இரண்டு பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் சேர்ந்த பாண்டியன், விஜய் என்பது தெரிய வந்தது.


அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரயில் வரும் போது ரயிலுடன் சேர்த்து செல்பி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.


அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News