காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணி மகன் பா.ஜ.க.வில் - உடையும் கேரள காங்கிரஸ்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி பா.ஜ.க. வில் சேர்ந்தார்.
By : Karthiga
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே அந்தோணியின் மகன் அனில்.கே அந்தோணி. இவர் கேரள மாநில காங்கிரஸ் டிஜிட்டல் ஊடக பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். இவர் குஜராத் கலவரங்களில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்தி பி.பி.சி வெளியிட்ட ஆவண படத்திற்கு கண்டனம் தெரிவித்ததால் காங்கிரஸ் சார் கடுமையாக சாடி சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிட்டனர்.
இந்தப் பிரச்சனையில் காங்கிரஸின் நிலைப்பாட்டைச் சாடிய அனில் கே.அந்தோணி அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் மதிய மந்திரிகள் பியூஸ் கோயல், வி. முரளீதரன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார் . "பா.ஜ.க.வில் சேர்வது குறித்து தந்தை ஏ.கே.அந்தோணியை கலந்து ஆலோசித்தீர்களா?" என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், இது ஆளுமைகளை பற்றியது அல்ல. இது கருத்து வேறுபாடுகளை பற்றியது. நான் சரியான முடிவு எடுத்துள்ளேன் என்று உறுதியாக நம்புகிறேன். என் தந்தை மீதான என் மரியாதை அப்படியே இருக்கும் என பதில் அளித்தார்.