Kathir News
Begin typing your search above and press return to search.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு 8 மணி நேரம் முன்னதாகவே நடை சாத்தப்பட்ட ஏழுமலையான் கோவில் - மீண்டும் தரிசனம் எப்போது?

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு 8 மணி நேரம் முன்னதாகவே நடை சாத்தப்பட்ட ஏழுமலையான் கோவில் - மீண்டும் தரிசனம் எப்போது?

Mohan RajBy : Mohan Raj

  |  25 Oct 2022 10:35 AM GMT

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் 8 மணி நேரத்திற்கு முன்மாதமாகவே காலை 8:11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.

இது மட்டுமின்றி திருமலையில் உள்ள அன்னதான கூடம், உணவகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பின்பு கோவில் சுத்தம் செய்யப்பட்டு இரவு 7:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி-திருமலா தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News