Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரவாதிகளால் எதிர் கொள்வது எவ்வாறு... இந்தியாவிடம் ஆலோசனை கேட்கும் ஷாங்காய்...

மத்திய உள்துறை அமித் ஷா அவர்கள் தலைமை தாங்கிய ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு.

தீவிரவாதிகளால் எதிர் கொள்வது எவ்வாறு... இந்தியாவிடம் ஆலோசனை கேட்கும் ஷாங்காய்...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 April 2023 2:10 AM GMT

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் புதுதில்லியில் நடைபெறும் அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். இந்த ஆலோசனையின் ஒருபகுதியாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.


இந்தக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை செயல்திறன்மிக்க பங்களிப்பை அளித்து வருகிறது. உறுப்பு நாடுகள் பயனடையும் வகையிலான, பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அந்தந்த நாடுகள், தீவிரவாதிகளால் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அளவிலான அவசர கால சூழ்நிலைகளை சமாளித்தல் விவாதம் நடைபெற இருக்கிறது.


மேலும் தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளனர். அதே நேரத்தில், அவசர கால சவால்களை எதிர்கொள்வதற்கான புத்தாக்கப் பயிற்சிகள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைக் குறித்த தங்களது கருத்துகளையும் உறுப்பு நாடுகள் பதிவு செய்கின்றன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News