Kathir News
Begin typing your search above and press return to search.

ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு பார்சலில் வந்த பரபரப்பு சம்பவம்: அனுப்பியது யார்?

திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு கூரியர் பார்சலில் மனித மண்டை ஓடு வந்தது. அதை அனுப்பியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு பார்சலில் வந்த பரபரப்பு சம்பவம்: அனுப்பியது யார்?

KarthigaBy : Karthiga

  |  5 May 2023 11:30 AM GMT

தஞ்சை அடுத்த திருவையாறு அருகே உள்ள முகமதுபந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம் .இவர் ஜமாத் தலைவராவார். இவருக்கு கடந்த மூன்றாம் தேதி இரவு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் அட்டைப் பெட்டியில் இருந்தது அந்த பார்சலை வாங்கி முகமது காசிம் வீட்டில் வைத்துவிட்டார் .இந்த நிலையில் அந்த பார்சலில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியதை அடுத்து நேற்று காலை தனது மகன் முகமது மகாதீர் என்பவரை அழைத்து பார்சலை திறந்து பார்க்குமாறு முகமது காசிம் கூறியுள்ளார்.


தந்தை கூறியதன்பேரில் முகமது மகாதீர் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அட்டைப்பெட்டியில் மனிதனின் மண்டை ஓடி இருப்பதை தெரிவித்தார். இது குறித்து திருவையாறு போலீசில் முகமது காசிம் புகார் செய்தார். அதன் பெயரில் திருவையாறு துணை போலீஸ் ராஜ் மோகன் சப் இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸ்காரர்கள் முகமது காசிம் வீட்டிற்கு சென்று மனித மண்டையோடு இருந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.


மேலும் அட்டைப்பெட்டியில் அந்த பார்சலை அனுப்பியவர் நவ்மன் பாய் கான் என்றும் ஒரு செல்போன் என்னும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து போலீசார் மண்டை ஓடு பார்சல் அனுப்பியது யார் ?எதற்காக அனுப்பினார்கள்? முகமது காசிமை பயமுறுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அனுப்பினார்களா ?அல்லது இதற்கு வேறு ஏதும் காரணமா?என விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜமாத் தலைவருக்கு மனித மண்டை ஓடு பார்சல் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News