Kathir News
Begin typing your search above and press return to search.

புதுவைக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு - மேம்பாலம் கட்ட அதிரடியாக ரூபாய் 531 கோடி ஒதுக்கீடு

புதுவையில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு ரூபாய் 531 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என சபாநாயகர் செல்வம் கூறினார்.

புதுவைக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் மத்திய அரசு - மேம்பாலம் கட்ட அதிரடியாக ரூபாய் 531 கோடி ஒதுக்கீடு

KarthigaBy : Karthiga

  |  25 Oct 2022 4:30 AM GMT

புதுமை மாநில மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி நாடு முழுவதும் வேலை வாய்ப்பு திருவிழாவை தொடங்கியுள்ளார்.இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. நேற்று மட்டும் 75 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. புதுச்சேரியில் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் காலியாக உள்ள பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு உத்தரவிட்டது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


புதுவைக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.இதில் ரூபாய் 225 கோடி புதிய சட்டசபை கட்டுவதற்கும், ரூ. 531 கோடி மேம்பாலம் கட்டுவதற்கும, ஆறாவது ஏழாவது ஊதிய குழுவிற்கு ₹ 150 கோடியை மத்திய அரசு வழங்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை புதுவைக்கு தொடர்ந்து செயல்படுத்தும்.இன்னும் ஓராண்டுக்குள் புதுவை மிளிரும் இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News