Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை அதிபர் மாளிகையில் அள்ள, அள்ள பணம்: எண்ண முடியாமல் சோர்ந்து போகும் மக்கள்!

இலங்கை அதிபர் மாளிகையில் அள்ள, அள்ள பணம்: எண்ண முடியாமல் சோர்ந்து போகும் மக்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  10 July 2022 9:19 AM GMT

இலங்கை அதிபர் மாளிகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை போராட்டக்காரர்கள் கண்டுப்பிடித்திருப்பது மேலும் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

தற்போது மீண்டும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தலைநகரை நோக்கி மக்கள் படையெடுத்தனர். பொதுமக்களின் வருகையை அறிந்த அதிபர் கோட்டபய ராஜபக்ச தன்னுடைய குடும்பத்தினருடன் தப்பியோடினார். இதனை தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்குள்ள சமையல் அறையில் சமைத்து சாப்பிட்டும், ஒருசில போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக குளித்து நீராடி வருகின்றனர். மேலும், அதிபர் மாளிகையில் உள்ள ரகசிய அறையை போராட்டக்காரர்கள் கண்டுப்பிடித்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கண்டுப்பிடித்தனர்.

பின்னர் அந்த பணத்தை வெளியில் எடுத்த மக்கள் எண்ணத் துவங்கினர். ஆனால் அவர்களால் அதனை எண்ண முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு மக்களும் தங்களுக்கு தேவையான பணத்தை அங்கிருந்து எடுத்துச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News