Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் : ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவாக நிற்கும் -மோடி!

ரஷ்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் : ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவாக நிற்கும் -மோடி!

KarthigaBy : Karthiga

  |  24 March 2024 5:33 PM GMT

ரஷ்யாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசையரங்கு ஒன்றில் பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அரங்க கட்டடம் தீப்பற்றி எரிந்தது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் மாஸ்கோவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். இந்த துயர சம்பவத்தில் ரஷ்ய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆதரவாக துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.


SOURCE :Dinaboomi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News