Kathir News
Begin typing your search above and press return to search.

தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவி ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவி ஏற்க தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது

தலைமை நீதிபதியாக சந்திர சூட் பதவி ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2022 9:15 AM GMT

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் யூ.யூ.லலித்தின் பதவிக்காலம் வருகிற எட்டாம் தேதியுடன் நிறைவடைகிறது .இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் 50 ஆவது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சந்திர சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற ஒன்பதாம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதற்கிடையே சந்திர சூட் தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க கோரி முர்சலின் அசிஜித் ஷேக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் .அந்த மனுவில் நீதிபதி சந்திரசேகர் பிறப்பித்த சில உத்தரவுகள் முரண்பாடுகளை கொண்டுள்ளன. அவர் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி யூ.யூ.லலித் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது .


அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆனந்த் முன்வைத்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் 'தவறான புரிதல் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பதால் விசாரணைக்கு ஏற்க முடியாது எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News