Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் தற்கொலைக்கு காரணமான அந்த 8 பேர் யார்.? சல்மான் கான் உட்பட பலபேரின் தலை உருளும் : பாலிவுட்டில் உள்ளடி அரசியல்!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் தற்கொலைக்கு காரணமான அந்த 8 பேர் யார்.? சல்மான் கான் உட்பட பலபேரின் தலை உருளும் : பாலிவுட்டில் உள்ளடி அரசியல்!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் தற்கொலைக்கு காரணமான அந்த 8 பேர்  யார்.? சல்மான் கான் உட்பட பலபேரின் தலை உருளும் : பாலிவுட்டில் உள்ளடி அரசியல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2020 8:03 AM GMT

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தின் மூலம் பாலிவுட்டில் நடைபெறும், உள்ளடி அரசியல் வெளிப்பட்டுள்ளது. ஜூன் 14 அன்று நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்த நெட்டிசன்கள் கரண் ஜோஹர் மற்றும் இன்னும் பலர் மீது குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

சமூக ஊடகங்களில் பல பதிவுகள், சுஷாந்தை பல பாலிவுட் படங்களில் இருந்து வெளியேற்றி, தனிமைப்படுத்தப்பட்டு அவரை மனச்சோர்வுக்குள்ளாக்கியது என்று தெரிவித்தது.

தற்போது, பீகார் முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, சுஷாந்தின் மரணம் தொடர்பாக கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான் கான் மற்றும் ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை மும்பை போலீசார் தொழில்முறை போட்டி கோணத்தில் விசாரிப்பார்கள் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அறிவித்தபடி, முஜாபர்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக ஐபிசி 306, 109, 504 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏ.என்.ஐ.யிடம் பேசிய வழக்கறிஞர், "புகாரில், சுஷாந்த் சிங் ராஜ்புத் ஏழு படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவரது சில படங்கள் வெளியிடப்படவில்லை என்றும் நான் குற்றம் சாட்டியுள்ளேன். அத்தகைய நிலைமை உருவாக்கப்பட்டது, இது அவரை தற்கொலை நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தியது. " என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News