Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கனிஸ்தானின் கதை முடிந்தது... ஆண்களை கொடூரமாக கொன்று நடு வீதியில் கிரேன்களில் தொங்கவிடும் தாலிபான்கள்..!

Taliban thugs hang corpses of ‘criminals’ from diggers in shocking photos from Afghanistan

ஆப்கனிஸ்தானின் கதை முடிந்தது... ஆண்களை கொடூரமாக கொன்று நடு வீதியில் கிரேன்களில் தொங்கவிடும் தாலிபான்கள்..!

MuruganandhamBy : Muruganandham

  |  7 Oct 2021 4:49 AM GMT

ஆப்கானிஸ்தானில் கிரேன்களில் ஆண்களின் உடல் தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில் காணப்படும் ஒரு புதிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட ஆண்கள் கொள்ளையடிக்க முயன்றபோது சிக்கி, இப்படி தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்ட அந்த மூன்று பேரும் கொள்ளையடிப்பதற்காக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தபோது பிடிபட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரத் பகுதியில் பொது மக்கள் பார்வைக்காக இப்படி கொள்ளையர்கள் தொங்க விடப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், சிறிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மற்றும் கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை ஆகிய பெரிய குற்றங்களை செய்தவர்கள் என சுமார் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கன் தலைநகர் காபூலில் சிறிய அளவில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள், சமீபத்தில், பொது வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர், கைவிலங்கு பூட்டி, முகத்தில் கரி பூசி, வாயில் கெட்டுப்போன பழைய ரொட்டி துண்டை திணித்து அவர்கள் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு கைகளை வெட்டுவது, கொலைகாரர்களை தலையில் சுடுவது அல்லது தூக்கிலிடுவது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அனைத்துமே பொது வெளியில் வைத்து செய்யப்படுகிறது. தாடியை ட்ரிம் செய்தது அல்லது பிரார்த்தனையில் கலந்து கொள்ளாததற்காக மத காவல்துறையினர் சில ஆண்களை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News