Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கான்: வீடு, வீடாக சோதனையிடும் தாலிபான் தீவிரவாதிகள் !மரண பீதியில் பொதுமக்கள் !

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் வீடு, வீடாகச் சென்று தாலிபான் தீவிரவாதிகள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனையானது, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் என ஒவ்வொரு வீடாக தாலிபான்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

ஆப்கான்: வீடு, வீடாக சோதனையிடும் தாலிபான் தீவிரவாதிகள் !மரண பீதியில்  பொதுமக்கள் !

ThangaveluBy : Thangavelu

  |  16 Aug 2021 1:19 PM GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் வீடு, வீடாகச் சென்று தாலிபான் தீவிரவாதிகள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த சோதனையானது, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் என ஒவ்வொரு வீடாக தாலிபான்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் விமானசேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து மக்களும் வீடுகளில் அடைப்பட்டுள்ளனர். இதில் தாலிபான் தீவிரவாதிகள் சோதனையிட்டு வருவதால் கதவை அடைத்துக்கொண்டு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள், பத்திரிகையாளர்கள் பீதியில் முடங்கியுள்ளனர்.

மேலும், வீடுகளில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தால் அதனை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் கூறுகின்றன. உலக நாடுகள் தங்களை காப்பாற்றுமா என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: Ndtv

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/16172351/Taliban-in-Afghan-capital-Kabul-start-collecting-weapons.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News