Kathir News
Begin typing your search above and press return to search.

தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பதிவிடப்படும் பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பதிவிடப்படும் பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  17 Aug 2021 10:48 AM GMT

தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் மக்களாட்சி முடிந்து தீவிரவாதிகளின் ஆட்சி அமைய உள்ளது. இதனால் தீவிரவாதிகளின் ஆட்சியை கண்டு அங்கிருந்து தப்பித்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இது பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க சட்டங்களின்படி தாலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் மிகவும் ஆபத்தான அமைப்பாக உள்ளனர். இதனால் தாலிபான் ஆதரவாக செயல்படுபவர்களின் பேஸ்புக் கணக்குகள் மற்றும் அவர்களின் பதிவுகள் நீக்கப்படும் என கூறியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2825133

Next Story
கதிர் தொகுப்பு
Trending News