தமிழக பா.ஜ.கவில் ஸ்டார்ட் -அப் பிரிவு: புதுமையான முயற்சிகளுக்கு ஊக்கம் - அண்ணாமலை அறிவிப்பு
புதுமையான முயற்சிகளுக்கு ஊக்குமளிக்கும் வகையில் தமிழக பா.ஜ.கவில் ஸ்டார்ட் அப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
By : Karthiga
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதம நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் வகையில் தமிழக பா.ஜனதா கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாக மற்றும் சமூகம் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நமது அணி பிரிவுகளை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளது. மேலும் பல்வேறு பிரிவுகளும் தொடங்கப்பட்டு கட்சியின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தீவிர செயல்பாடுகளாலும் பொதுமக்களை ஈர்க்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துவதன் மூலமாகவும் தமிழக பா.ஜ.க தமிழகத்தில் ஒரு திறன்மிக்க அரசியல் சக்தியாக தன்னை வலுப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் புதுமையான முயற்சிகளை ஊக்கப்படுத்தவும் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு முக்கிய தொடர்பு பாலமாக செயல்படுவதற்கும் ஸ்டார்ட் அப் பிரிவு என்ற புதிய பிரிவை தமிழக பா.ஜ.க தொடங்க இருக்கிறது. வளர்ச்சி உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். தமிழக இளைஞர்களிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் திறமையான மற்றும் புதுமையான சிந்தனையாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் பலத்திற்கு முக்கிய பங்களிப்பதற்கும் தமிழக பா.ஜனதா கொண்டிருக்கும் குறிக்கோளை வெளிக்காட்டும் முயற்சி தான் இது. இந்த ஸ்டார்ட்-அப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆனந்தன் ஐயா சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.