பார் நடத்த அனுமதி வழங்க ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது
பார் நடத்த அனுமதி வழங்க ரூபாய் ஒரு லட்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது செய்யப்பட்டார்.
By : Karthiga
சென்னை முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தானு . இவர் ஏற்கனவே வேப்பம்பட்டு, காக்களூர் மற்றும் திருத்தணி சாலையில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார் .
இந்த நிலையில் இவர் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் புதிதாக பார் தொடங்க அனுமதி கேட்டு காக்களூர் தொழிற்சாலை அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் சென்று டாஸ்மாக் மேலாளர் மற்றும் துணை ஆட்சியர் கலை மன்னனிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதை அடுத்து கலைமன்னன் ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி தருவேன் என்று கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத தானு இது குறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸ் நேற்று மாலை காக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் தானுவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் ஒரு லட்சம் பணத்தை கொடுத்து அனுப்பினர். அப்பொழுது கலை மன்னன் அவருக்கு டிரைவராக வேலை செய்யும் சங்கர் என்பவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார் .
அப்போது தானு சங்கரிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அம்பத்தூர் பிரான் பர்க் லேட்டஸ்ட் பூங்கா நகரைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
- source dinathanthi