Kathir News
Begin typing your search above and press return to search.

திருவெண்ணெய்நல்லூர் அருகே பணிச்சுமையால் ஆசிரியை தற்கொலை - பள்ளிக்கல்வித்துறை பதில் என்ன?

திருவெண்ணெய்நல்லூர் அருகே அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே பணிச்சுமையால் ஆசிரியை தற்கொலை - பள்ளிக்கல்வித்துறை பதில் என்ன?

KarthigaBy : Karthiga

  |  31 Oct 2022 10:15 AM GMT

திருவெண்ணைநல்லூர் அருகே பணி சுமை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசாருதீன் இவருடைய மனைவி ஆயிஷா. இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.ஆயிஷா அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.


பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஆயிஷாவுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது .இதனால் கடந்த சில நாட்களாக ஆயிஷா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் வாடகை வீட்டில் நேற்று காலை 11:30 மணிக்கு தூக்கு போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஆயிஷா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பணிச்சுமை காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News