Kathir News
Begin typing your search above and press return to search.

பெரிய அளவிலான வன்முறைகளை தடுக்கவே தொலைபேசி இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை!

பெரிய அளவிலான வன்முறைகளை தடுக்கவே தொலைபேசி இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை!

பெரிய அளவிலான வன்முறைகளை தடுக்கவே தொலைபேசி இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2019 1:14 PM GMT


மத்திய அரசு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும், அம்மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் ‘370’ மற்றும், ‘35ஏ’ சட்டப்பிரிவுகளை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து வதந்திகள் பரவ கூடாது என்றும், கலவரங்கள் உண்டாக கூடாதென்றும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நள்ளிரவே, தொலைத்தொடர்பு சேவையை அரசு துண்டித்தது. தற்போது 72 நாட்களுக்குப் பின்னர், அங்கு தொலைத்தொடர்பு சேவை மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது.


2016 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஜம்மு- காஷ்மீரில் 183 முறையும், ராஜஸ்தான் மாநிலத்தில் 43 முறையும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு 67 முறை ஜம்மு - காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுப் பாதுகாப்பு மற்றும்முன்னெச்சரிக்கை நட வடிக்கைக்காகவே அதிகமுறை தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.


இதில், தேசியப் பாதுகாப்புக்காக 26 முறை துண்டிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் புர்ஹான்வானி கொல்லப்பட்டபோது அதிகபட்சமாக 2016 ஜூலை முதல் ஜனவரி 2017 வரை தொலைத் தொடர்புசேவைகள் 6 மாத காலம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. ஆனால் அரசு வேண்டுமன்றே தொலைப்பேசி சேவையை துண்டிப்பது போல சித்தரித்து பிரிவினைவாதிகள் வதந்தி பரப்பி வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News