உயிர் காக்கும் கருவிகளில் கூட பழி வாங்கிய சீனா - இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் வேலைக்கே ஆகாது!
உயிர் காக்கும் கருவிகளில் கூட பழி வாங்கிய சீனா - இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகள் வேலைக்கே ஆகாது!

இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் என்ற அந்த இரு நிறுவனங்களிடம் இருந்து மட்டும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கொரோனா பரிசோதனைக்கு, ஆர்.டி. பி.சி.ஆர். டெஸ்ட் மட்டுமே மிக சிறந்தது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
"இதைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட இந்த கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அவற்றை சப்ளையர்களுக்கு திருப்பி அனுப்புமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது."
கண்காணிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தல்களுடன் மாநிலங்களுக்கு விரைவான ஆன்டிபாடி சோதனை கருவிகளை ஐ.சி.எம்.ஆர் வழங்கியது.
கொரோனாவை கண்டறிவதற்கு ஆர்டி-பி.சி.ஆர், தொண்டை அல்லது நாசி துணியால் ஆன சோதனை சிறந்த பயன்பாடு என்று ஐ.சி.எம்.ஆர் கூறுகிறது.