Kathir News
Begin typing your search above and press return to search.

தலாய் லாமா புகைப்படத்தை போனில் வைத்தாலே ஆபத்து: கொத்தாக மக்களை கைது செய்யும் சீனா !

காவலில் உள்ள கைதிகள் யாரும் தங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

தலாய் லாமா புகைப்படத்தை போனில் வைத்தாலே ஆபத்து: கொத்தாக மக்களை கைது செய்யும் சீனா !

Saffron MomBy : Saffron Mom

  |  2 Sep 2021 1:06 PM GMT

ஆக்கிரமிக்கப்பட்ட திபெத்தில் சீனா பல்வேறு அடக்குமுறைகளை நிகழ்த்தி வருவது தொடர் செய்திகளாகி உள்ளது. அங்குள்ள டிஸா வோன்போ டவுனில் சீன இராணுவம் பலரை ஒரே நேரத்தில் கைதுகள் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 22 அன்று 200 இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்களில் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் புத்த மடாலயங்களில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி 50 பேரை கைது செய்தனர் என்று FreeTibet.org தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடத்தப்பட்ட இராணுவ தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 30 உள்ளூர் திபெத்தியர்கள் மற்றும் டிஸா வோன்போ மடாலயத்திலிருந்து 19 துறவிகள் போலீஸ் காவலுக்கு வரவழைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. நாடுகடத்தப்பட்ட ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் புகைப்படங்களை அவர்களின் மொபைல் போன்களில் வைத்திருந்தார்கள், அவற்றை ஆன்லைனில் வெளியிட்டார்கள், அவருடைய வீட்டிலும் மடத்திலும் அவருடைய புகைப்படங்களை வைத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

காவலில் உள்ள கைதிகள் யாரும் தங்கள் குடும்பத்தினரையோ நண்பர்களையோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.

"மக்கள் சந்திப்பு" என்றழைக்கப்படும் கூட்டம் அடுத்த நாள் ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது, அதன் பிறகு நகரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டிஸா வோன்போ டவுனின் திபெத்தியர்களின் ஒவ்வொரு வீடும் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் தேடப்பட்டது. மக்கள் சந்திப்பில் ஐந்து அம்ச உத்தரவுகள் அறிவிக்கப்பட்டது. அவை,

1) தலாய் லாமாவின் புகைப்படங்களை யாரும் வைத்திருக்க முடியாது.

2) WeChat இல் எந்த முக்கியமான தலைப்புகளையும் பேச முடியாது

3) எந்த முக்கியமான செய்திகளையும் வெளியிடாதீர்கள் அல்லது எந்த மாநில ரகசியத்தையும் பரப்ப வேண்டாம்

4) மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பின்பற்ற வேண்டும்

5) சீன அரசின் சட்டங்களை மக்கள் பின்பற்ற வேண்டும்

இதேபோன்ற இராணுவ தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சில கைதிகள் கைது செய்யப்பட்டனர் . தலாய் லாமாவின் புகைப்படங்களை வைத்து, புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த அதே குற்றச்சாட்டுகளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னதாக திபெத்திய மொழியில் கல்வி கோரி வேண்டுகோள் விடுத்த 19 வயதான திபெத்திய சிறுவன், சீன அரசுக்கு எதிராக கலகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கிழக்கு திபெத்திய மாகாணமான அம்டோவில் சீன போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டான்.

தனது பள்ளிப் பாடங்களை திபெத்திய மொழியில் கற்பிக்க அனுமதிக்குமாறு கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.​​ஷெராப் டோர்ஜி என்ற அந்த இளைஞன் ட்ரொட்ஸிக் டவுன்ஷிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சீன கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திலும் சேர மறுத்துவிட்டார் என்று திபெட்வாட்ச் செய்திகள் தெரிவிக்கிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News