பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவது கண்டிக்கத்தக்கது - அண்ணாமலை
பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார்.
By : Karthiga
பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பன்னெடுங்காலமாகா கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழாக்கள் நடக்கவில்லை.தற்போது இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெறும் விழாவில் பெருந்திரளாக மக்கள் பங்கு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மராமத்து பணியை காரணம் காட்டி கோவிலுக்குள் பக்தர்கள் தங்கி இருக்க நிர்வாக குழு தடைவிதித்துள்ளது. பக்தர்களை ஆன்மீக உணர்வுகளுக்கும் பாரம்பரிய மரபுகளுக்கும் எதிராக தி.மு.க அரசு தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற தமிழக அரசு அனுமதி மறுப்பதும் பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே தமிழக அரசு நடைபெற இருக்கும் கந்த சஷ்டி விழாவில் கோவிலுக்குள் தங்கி இருந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும். பக்தர்களின் பாரம்பரிய உரிமையை பறிக்காமல் அவர்களை கோவிலுக்குள் தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.