Kathir News
Begin typing your search above and press return to search.

எப்படியும் சோனியா குடும்பத்தின் பினாமி தான் காங்கிரஸின் அடுத்த தலைவர் - பா.ஜ.க

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக யார் வந்தாலும் அவர் சோனியா காந்தி குடும்பத்தின் பினாமியாகத்தான் இருப்பார் என்று பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.

எப்படியும் சோனியா குடும்பத்தின் பினாமி தான் காங்கிரஸின் அடுத்த தலைவர் - பா.ஜ.க

KarthigaBy : Karthiga

  |  24 Sep 2022 5:30 AM GMT

22 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் இடையே போட்டி ஏற்படும் சூழல் உள்ளது. இதையொட்டி பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவாலா கூறுகையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக யார் வந்தாலும் ராகுல் காந்தி ஒப்புயர்வற்ற இடத்தில் தான் இருப்பார் என்று பா. சிதம்பரம் சொல்லி இருக்கிறார்.


இது காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக யார் வந்தாலும் அவர் காந்தி குடும்பத்தின் பினாமி என்பதற்கு சான்றாக அமைகிறது. சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் மன்மோகன் சிங் செயல்பட்டது போல காங்கிரஸின் அடுத்த தலைவர் அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார் என தெரிவித்தார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News