கொசு ஒழிப்பு நடவடிக்கை - தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சூக் மாண்டவியா அறிவுரை
கொசு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
By : Mohan Raj
கொசு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் நாடு முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சூக் மாண்டவியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொளி மூலம் ஏற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர் தமிழகம், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என அறிவித்தார்.
வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கொசு உழைப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என கூறினார்.
மேலும் குடிநீர் சுகாதாரம் போன்ற துறைகளுக்கிடையான ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் பிற தொடர்புடைய துறைகளை நெருக்கமாகவும் பணியாற்றுமாறும் சுகாதாரத்தை முக்கியமாகவும் பேணி காக்க வேண்டும் மாநில சுகாதாரத்துறை அமைசர்களுடன் அறிவுறுத்தினார்.