விவசாயிகள் நலனுக்காக மீண்டும் வெங்காயம் கொள்முதலை தொடங்கிய மத்திய அரசு
மராட்டிய, மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு வெங்காயம் கொள்முதல் செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளது.

By : Karthiga
நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெங்காயம் மீது மத்திய அரசு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்தது. இதற்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக அவர்களிடம் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்வதை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது :-
மராட்டிய , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து வெங்காயம் கொள்முதல் செய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. குவிண்டாலுக்கு ₹2,410 என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்றுமதி வரி விதிக்கும் போது விவசாயிகளிடமிருந்து கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவு செய்தோம் . இந்த வெங்காயத்தை மத்திய அரசு கையறுப்பில் வைத்திருக்கும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI
