வேலையில்லா திண்டாட்டத்தை விரட்டியடிக்கும் மத்திய அரசு: 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை
அரசு பணி ஆள் தேர்வில் குடும்ப கட்சிகள் ஊழலை ஊக்குவித்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
By : Karthiga
மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் 'ரோஜ்கார் மேளா' நேற்று நடைபெற்றது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். பின்னர் அவர்கள் இடையே பிரதமர் மோடி பேசியதாவது :-
முன்பெல்லாம் அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஒன்று முதல் ஒன்றரை ஆண்டு ஆகும். ஆனால் இப்போது வெளிப்படைதன்மையுடன் சில மாதங்களில் முடிந்து விடுகிறது. அனைத்து அமைப்புகளிலும் ஊழலையும் உறவினர்களுக்கு சலுகை அளிப்பதையும் குடும்ப கட்சிகள் ஊக்குவித்திருப்பதை பார்த்து உள்ளோம். அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியிலும் அந்த கட்சிகள் ஊழலையும் உறவினர்களுக்கு சலுகை அளிப்பதையும் ஊக்குவித்துள்ளன. ஒவ்வொரு பணிக்கும் விலை நிர்ணயத்து இளைஞர்களிடம் கொள்ளையடித்துள்ளன. இளைஞர்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
கடந்த 2014 - ஆம் ஆண்டு இந்த அரசு வந்தபோது வெளிப்படுத்தன்மையும் வந்தது. ஆள் தேர்வில் உறவினர்களுக்கு சலுகை காட்டுவது முடிவுக்கு வந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பை விட இந்தியா இப்போது திறமாகவும் பாதுகாப்பாகவும் வலிமையாகவும் உள்ளது . தீர்க்கமான தன்மை இந்திய அரசின் அடையாளமாக உள்ளது. தனியார் துறையிலும் பொது துறையிலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன .
முத்ரா,ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களால் சுய வேலைவாய்ப்புகளும் பெருகி உள்ளன. கடந்த காலங்களில் பொருளாதாரம் குறித்து இவ்வளவு நம்பிக்கை இருந்தது இல்லை . ஒரு பக்கம் கொரோனாவால் மந்த நிலையும் மற்றொருபுறம் உக்கரைன் போரால் வினியோக சங்கிலி பாதிக்கப்பட்ட நிலையும் இருந்த போதிலும் பொருளாதாரத்தை புதிய உயரத்துக்கு இந்தியா இட்டுச் சென்றுள்ளது.
ரோஜ்கார் மேளா என்பது பா.ஜ.க அரசின் புதிய அடையாளமாகிவிட்டது. அரசு வேலையில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலம். அடுத்த 25 ஆண்டு காலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டிய இலக்கு அவர்கள் முன்பு இருக்கிறது. அரசியல் ஊழல் திட்டங்களில் முறைகேடு அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை முந்தைய அரசுகளின் அடையாளமாக இருந்தது . இன்று பொருளாதாரம் மற்றும் முற்போக்கு சமூக சீர்திருத்தங்களால் இந்தியா அரசு அடையாளம் காட்டப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.