பான் - ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் மூன்று மாதம் நீட்டிப்பு - ஜூன் 30 கடைசி தேதி!
பான்- ஆதார் எண்கள் இணைப்புக்கான கால அவகாசத்தை மேலும் மூன்று மாதம் நீட்டித்து ஜூன் 30-ம் தேதியை கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
By : Karthiga
நிரந்தர கணக்கு எண் ஆதார் எண்களை உரிய கட்டணம் செலுத்திய மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பான் - ஆதார் எண்கள் இணைப்புக்கான கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு அதாவது வருகிற ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பில் 'வரி செலுத்துவோருக்கு' மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில் பான்- ஆதார் எண்கள் இணைப்புக்கான கடைசி தேதியில் ஜூன் 30 ஆக மாற்றப்பட்டுள்ளது.
அந்த தேதிக்குள் குறிப்பிட்ட ஆணையத்தில் ஆதார் எண்ணை தெரிவிக்கலாம். இது தொடர்பாக தனியாக ஓர் அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஜூன் 30-ஆம் தேதிக்குள் இனைக்காதவர்களின் பான் எண் ஜூலை 1ஆம் தேதி முதல் செயல் இழந்து விடும். அதன் பிறகு 30 நாட்களுக்குள் ரூபாய் ஆயிரம் செலுத்தினால் தான் எண்மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். இதுவரை 51 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.