ஏழுமலையான் குடை ஊர்வலத்தில் காசு வீசும் பக்கதர்களுக்கு தேவஸ்தானம் அன்பான வேண்டுகோள்
ஏழுமலையான் குடை ஊர்வலத்தின் போது பக்தர்கள் காணிக்கை போடக்கூடாது என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
By : Mohan Raj
ஏழுமலையான் குடை ஊர்வலத்தின் போது பக்தர்கள் காணிக்கை போடக்கூடாது என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, 'திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா நடக்கிறது. விழா பின்பு ஐந்தாவது நாள் கருட சேவை நடக்கும் அன்று உற்சவர் மலையப்ப சாமிக்கு பிரத்தியோக அலங்காரம் செய்யப்படும்.
இந்தக் குடைகள் ஒரு இந்து அமைப்பு உற்சவர் மலைப்பசாமிக்கு சமர்ப்பிப்பதாக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட கூடைகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருமலையை நோக்கி வரும். மேலும் இந்த குடை ஊர்வலத்தின் போது எந்த ஒரு பக்தரும் காணிக்கை போடக்கூடாது.
குடை ஊர்வலத்தின் போது பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றடைவதில்லை ஊர்வலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளுக்கும் திருமண திருப்பதி தேவஸ்தானத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவே அவர்கள் அதை கவனத்தில் கொண்டு காணிக்கைகளை குடை மீது வீசி எறியாமல் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.