Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய கட்டிடத்திற்கு வழி தந்து விடை பெறுகிறது 100 ஆண்டை நெருங்கும் ஜனநாயக ஆலயம்!

இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகவும் ஆலயமாகவும் திகழ்ந்த நாடாளுமன்ற கட்டிடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வழி விட்டு விடைபெறுகிறது. இந்த புகழ்பெற்ற வட்ட வடிவ கட்டிடம் 100 ஆண்டை நெருங்கும் நிலையில் நிரந்தர அமைதியில் ஆழப்போகிறது.

புதிய கட்டிடத்திற்கு வழி தந்து விடை பெறுகிறது 100 ஆண்டை நெருங்கும் ஜனநாயக ஆலயம்!

KarthigaBy : Karthiga

  |  18 Sep 2023 5:30 PM GMT

1927 - ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அப்போதைய வைசிராய் இர்வின் பிரபு இந்த பிரம்மாண்ட கட்டிடத்தை தங்கச் சாவியால் திறந்து வைத்தார். தங்களின் புதிய தலைநகரமாக புதுடெல்லியை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் அதன் மகுடமாக ரைஸினா குன்று பகுதியில் கட்டியதுதான் இந்த நாடாளுமன்ற கட்டிடம். ஆனால் கோலாகல திறப்பு விழா காணும் போது இதன் பெயர் கவுன்சில் ஹவுஸ். இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கர். இவர்தான் எட்வின் லுட்யன்ஸ் உடன் இணைந்து புதுடெல்லிக்கான திட்டத்தை வரைந்து கொடுத்தவர்.


நாடாளுமன்ற கட்டிடத்தின் தனித்துவமான வட்ட வடிவ தோற்றம்தான் அதை உலகில் மற்ற முக்கிய கட்டிடங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது . அதனாலேயே அனைவரின் மனதிலும் இது ஆழப் பதிந்து இருக்கிறது . சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கட்டிடம் 560 அடி விட்டமும் 1760 அடி சுற்றளவும் கொண்டது .முதல் தளத்தில் இருந்து எழுந்த 144 கம்பீரத் தூண்களால் தாங்கப்பட்டு நிற்கிறது. இந்த நாடாளுமன்ற கடிதம் தனது 96 ஆண்டுகால பயணத்தில் பல முக்கிய உலக நிகழ்வுகளையும் உள்நாட்டு சரித்திர மாற்றங்களையும் கண்டிருக்கிறது.


அவற்றில் இரண்டாம் உலகப்போரும் இந்திய விடுதலையும் முக்கியமானவை. இந்திய அரசியலின் முக்கிய ஆளுமைகள் அனைவரின் பாதங்களும் இங்கு பதிந்து இருக்கின்றன. அவர்களின் உரைவீச்சுகள் இதன் சுவர்களில் பட்டு எதிரொலித்திருக்கின்றன. ஆங்கிலேயர்களின் அதிகாரபீடமாகத் திகழ்ந்த இந்த கட்டிடம் பின்னர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சம்விதான் சபா என்ற அரசியலமைப்பு சபைக்கான இடமாக மாறியது.


தொடர்ந்து இந்திய நாடாளுமன்ற கட்டிடமாக பல சட்டங்களின் உருவாக்கத்தையும் எண்ணற்ற கலாச்சாரமான விவாதங்களையும் சில இனிய நிகழ்வுகளையும் கண்டிருக்கின்றது. ஆனால் கடந்த 2001 டிசம்பர் 13-ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் இந்த பெருங்கட்டிடத்தில் மாறாத வடுவாக நிற்கிறது . கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடைந்த மழைக்கால கூட்ட தொடருடன் நாடாளுமன்ற கட்டிடம் தனது நெடும் கதவுகளை மூடிக்கொண்டது.


எதிர்கால தேவை இடவசதியை கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28ஆம் தேதி தெரிந்து வைத்தார். அருகிலேயே உள்ள அந்த கட்டிடத்திற்கு இன்று மக்கள் பிரதிநிதிகள் இடம்பெயர்வார்கள். அந்த முக்கோண வடிவ புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அரங்கேறும் ஜனநாயக செயல்பாடுகளை பழைய வட்ட வடிவ நாடாளுமன்ற கட்டிடம் இனி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அதில் கொஞ்சம் ஏக்கமும் கலந்திருக்கும்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News