Kathir News
Begin typing your search above and press return to search.

ஓய்.எம்.சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது பாலியல் புகார் - தொடர் தொல்லையால் மாணவி அவதி!

செல்போனில் ஆபாச தகவல் கல்லூரி முதல்வர் மீது மாணவி பாலியல் தொல்லை புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை

ஓய்.எம்.சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது பாலியல் புகார் - தொடர் தொல்லையால் மாணவி அவதி!

KarthigaBy : Karthiga

  |  3 Dec 2022 1:45 PM GMT

சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ வளாகத்தில் உடற்கல்வியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான இந்த கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் உள்ளார். இவர் மீது அதே கல்லூரியில் முதல்நிலை கல்வி படித்து வரும் விடுதி மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


அந்த புகாரில் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் எனக்கு உதவி செய்பவர் போல பழக ஆரம்பித்து தற்போது எனக்கு செல்போனில் ஆபாச தகவலை அனுப்பி வருகிறார். என்னை படுக்கைக்கு அழைத்தும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜார்ஜ் ஆபிரகாம் மீது பாலியல் தொந்தரத்தில் செய்வதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News