Kathir News
Begin typing your search above and press return to search.

மது குடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன் - டாஸ்மாக் கடை முன் சீரழிந்த குடும்பம்

பொள்ளாச்சி அருகே மது குடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் டாஸ்மாக் கடை முன் தந்தையை மகன் வெட்டி கொலை செய்தார் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மது குடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன் - டாஸ்மாக் கடை முன் சீரழிந்த குடும்பம்

KarthigaBy : Karthiga

  |  28 Nov 2022 8:45 AM GMT

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். கூலித் தொழிலாளி.இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகன் கார்த்திக். இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார. இந்த நிலையில் சிவலிங்கத்திற்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவி சித்ராதேவியிடம் தினம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் சிவலிங்கம் தினமும் மது குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தியதாக தெரிகிறது. இதை அவரது மகன் கார்த்திக் கண்டித்து உள்ளார். ஆனால் கார்த்திக் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதற்கிடையில் நேற்று மாலை பூசாரிப்பட்டியில் உள்ள மது கடைக்கு அருகில் உள்ள மதுபாரில் சிவலிங்கம் மது அருந்தச் சென்றுள்ளார். பின்னர் அங்கு மது அருந்திவிட்டு வெளியே வரும்போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அவருடைய தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் இருந்த கார்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவலிங்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.


இதை அடுத்து கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்த தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் சிவலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை வலை வீசி தேடி வருகின்றனர்.குடிபோதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News