Kathir News
Begin typing your search above and press return to search.

எதிர்காலத்தில் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தால் விளைய இருக்கும் ஆச்சரியங்களும் அதிசயங்களும்!

செயற்கை அறிவு தொழில்நுட்பத்தால் விளையும் அதிசயங்கள் பற்றிய தகவல்களை காண்போம்.

எதிர்காலத்தில் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தால் விளைய இருக்கும் ஆச்சரியங்களும் அதிசயங்களும்!

KarthigaBy : Karthiga

  |  3 Dec 2023 7:15 AM GMT

இன்றைய தினத்தில் செயற்கை அறிவு தொழில்நுட்பம் ஆபாச பட உருவாக்கத்தால் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் நாளைய உலகில் செயற்கை அறிவு தொழில்நுட்பம் எத்தகைய முக்கியமான பங்கை வகிக்க போகிறது என்பதற்கு உதாரணமாக சிறிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் சாதாரண புகைப்படத்தில் உள்ள ஒரு குருவியை தேர்வு செய்கிறார்கள். உடனே அது உயிருடன் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல உயிர்த்தெழுந்து தலையசைப்பதாக காட்சி அமைத்து தருகிறது.

செயற்கை அறிவு தொழில்நுட்பம் அதாவது பல நாட்கள் பணி செய்து உருவாக்க வேண்டிய அனிமேஷன் காட்சியை ஒரு நிமிடத்திற்குள் நடக்கும் வேலையாக மாற்றி விடுகிறது. இந்த அற்புத தொழில்நுட்பம் இதுபோல சாலையில் இருக்கும் காரை தேர்வு செய்தால் கார் ஓடுகிறது. பனி பூத்த காலையில் மரங்களின் நிலையை தேர்வு செய்தால் காற்றில் இலை ஆடுவது பனித்துளி விழுவது போன்ற காட்சிகளை கணப்பொழுதில் தந்து அசத்துகிறது செயற்கை அறிவு என்ற தொழில்நுட்பம் .இதுபோல சாலையில் இருக்கும் காரை தேர்வு செய்தால் கார் ஓடுகிறது.

ரெடிட் சமூக வலைதளத்தில் ப்ளூட்டோ என் என்ற பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பதிவு பலரையும் ஈர்த்து வருகிறது. இத்தகைய சிறப்பு அம்சங்களால் செயற்கை அறிவு நுட்பம் சினிமா தயாரிப்பில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி போகிறது என்றால் மிகை இல்லை. அதை தாண்டி நமது வாழ்வின் பல இடங்களிலும் இந்த தொழில்நுட்பம் நுழைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது நம்மை சுற்றி இருக்கும் எலக்ட்ரானிக் கருவிகள் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தால் இனி நம்முடன் பேச ஆரம்பிக்கலாம். தானாக இயங்கலாம். செயற்கை தொழில்நுட்பத்தை நம்மால் புறக்கணிக்க முடியாது என்பதே நிதர்சனம். ஆனால் அததன் ஆபத்தான பக்கமாக இருக்கும் ஆபாச மிரட்டல்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வது நமது புத்திசாலித்தனம்.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News