Kathir News
Begin typing your search above and press return to search.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

KarthigaBy : Karthiga

  |  25 Nov 2022 11:45 AM GMT

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூன்றாவது தளத்தில் உள்ள லிப்டை நோயாளிகள், டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை நான் 4.30 மணி அளவில் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு டாக்டர் ,ஒரு நர்ஸ் உள்ளிட்ட 12 பேர் லிப்டில் ஏறினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் லிப்டை தாங்கி செல்லும் இரும்பு கம்பி அறுந்து மள மளவென முதல் தளத்தில் நின்றது. மேலும் இரும்பு கம்பியுடன் மின்வயரும் அறுந்ததால் தரைதளம் வரை செல்லாமல் முதல் மாடியிலேயே லிப்ட் நின்றது. இதனால் லிப்ட்டில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அருகில் இருந்தவர்கள் லிப்டின் கதவை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.இதுபோன்ற சம்பவம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நான்காவது முறையாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News