Kathir News
Begin typing your search above and press return to search.

விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது- தெறிக்க விட்ட அண்ணாமலை!

பொங்கல் வேட்டி சட்டை விநியோகத்திலும் திமுக அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதை அண்ணாமலை கண்டுபிடித்து தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது- தெறிக்க விட்ட அண்ணாமலை!

KarthigaBy : Karthiga

  |  8 Feb 2024 9:45 AM GMT

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பயணத்தின்போது, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் திரு. காந்தி அவர்களின் விஞ்ஞானபூர்வமான புதிய ஊழல் ஒன்றை அண்ணாமலை வெளிப்படுத்தியுள்ளார்."அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது.


வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும், இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர். கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.


பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்". இவ்வாறு அண்ணாமலை தனது எக்ஸ் தளபதி தெரிவித்துள்ளார்.


SOURCE :Oneindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News