Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை விமர்சித்த மூன்று மாலத்தீவு மந்திரிகள் இடைநீக்கம்!

லட்ச தீவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடியை இழிவாக விமர்சித்த மூன்று மாலத்தீவு மந்திரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடியை விமர்சித்த மூன்று மாலத்தீவு மந்திரிகள் இடைநீக்கம்!

KarthigaBy : Karthiga

  |  8 Jan 2024 5:30 AM GMT

பிரதமர் மோடி கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள கடற்கரையில் நடைபயிற்சி செய்தார். உரிய உபகரணங்களுடன் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவு தான் சரியான தேர்வு என்றும் அவர் கூறினார்.


இதற்கு இடையே அண்டை நாடான மாலத்தீவின் அரசியல்வாதிகள் சிலர் பிரதமர் மோடியை இனரீதியாக இழிவான வார்த்தைகளால் சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்தனர். அவர்களில் மூன்று மந்திரிகளும் அடங்குவர். சுற்றுலாவை பொறுத்தவரை மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது. மாலத்தீவில் உள்ள வசதிகளை இந்தியாவால் அளிக்க முடியாது என்ற அர்த்தத்தில் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது .


மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள இந்திய தூதரகம் இந்த பிரச்சனையை மாலத்தீவு அதிபர் கவனத்திற்கு எடுத்துச் சென்றது பிரதமருக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் அரசுக்கும் அந்த கருத்துகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெளிவுபடுத்தியது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


சமூக வலைதளங்களில் அரசை சேர்ந்த சிலர் இழிவான கருத்துக்களை தெரிவித்தது எங்கள் கவனத்துக்கு வந்தது .அவை தனி நபர்களின் கருத்துக்கள். அரசுக்கும் அவற்றுக்கும் சம்பந்தம் இல்லை. கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஆதரவான மாலத்தீவு முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத் இப்ராஹிம், முகமது சோலி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடிக்கு எதிரான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.


மோடியை இழிவாக விமர்சித்த மூன்று மந்திரிகளை மாலத்தீவு அரசு நேற்று இடை நீக்கம் செய்தது .இளைஞர் நல அமைச்சகத்தைச் சேர்ந்த துணை மந்திரிகள் மால்ஷா ஷெரீப், மரியம் சீயூனா, அப்துல்லா மசூம் மஜீத் ஆகியோர் நீக்கப்பட்டவர்கள் ஆவார்கள். மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். அவர் சீனாவுக்கு ஆதரவானவர். அவர் பதவிக்கு வந்ததிலிருந்து இந்தியா மாலத்தீவில் ஆன நட்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News