Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்கடவூரில் உள்ள ஸ்ரீ அமிர்த காடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

திருக்கடவூரில் உள்ள ஸ்ரீ அமிர்த காடேஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேகம்.

திருக்கடவூரில் உள்ள ஸ்ரீ அமிர்த காடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 March 2022 2:06 AM GMT

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு அமிர்த காடேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடவூரில் உள்ள ஸ்ரீ அமிர்த காடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டு களித்தனர்.மேலும் இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. ஏராளமான மக்கள் திரளாக கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்கள்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடவூரில் உள்ள ஸ்ரீ அமிர்த காடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டு களித்தனர். 'யாகசாலை' பூஜை அதிகாலையில் 'கடம்' ஊர்வலத்தைத் தொடர்ந்து தொடங்கியது. முதலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கால சம்ஹாரமூர்த்தி சந்நிதிகளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ அமிர்த காடேஸ்வரர் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடந்தது.


தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து மாலையில் மகாபிஷேகம் நடந்தது. இக்கோயில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமானது. திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாடுதுறை ஆட்சியர் ஆர்.லலிதா, தஞ்சாவூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Input & Image courtesy: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News