Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 10 லட்சம் நிதி வழங்கிய தமிழக பா.ஜ.க. பிரமுகர்..
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 10 லட்சம் நிதி வழங்கிய தமிழக பா.ஜ.க. பிரமுகர்..
By : Kathir Webdesk
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு PM Cares நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதற்கு பல பிரபலங்கள், நடிகர்கள், பெரும் நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழக பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணன் மத்திய - மாநில அரசுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஓசூர் தொழிலதிபர்களும், பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான பாலகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கோட்ட பொறுப்பாளராக இருக்கிறார் இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு அவரின் சார்பாக 5 லட்ச ரூபாயும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பாலாஜி பிரஸ் இந்தியா பிரைவேட் லிமிடட் சார்பாக 5 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளார்.
Next Story