இரண்டு மிக முக்கிய கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது - எந்த கோவில்கள் தெரியுமா?
ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ் , டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரிதுவார் டதஷ் பிரஜாபதி மந்திர் ,ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர் ,டேராடூன் தவகேஷ்வர் மகாதேவ மந்திர் ஆகிய கோவில்களை நிர்வகித்துவரும் மகா நிர்வானி பஞ்சாயத்தி அகாரா அமைப்பின் செயலாளர் மகேந்திரா பூரி கூறுகையில் முறையாக ஆடை அணியாத ஆண் பெண் பக்தர்கள் இந்த கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பெண்கள் தங்கள் உடம்பை 80 சதவீதம் மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும் . இந்த ஆடை கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார் . மேலும் அவர் சிலர் கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி ஆடை அணிந்து வருகின்றனர். இதைக் குறித்து பக்தர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதை அடுத்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் எங்கள் அமைப்பு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.