Kathir News
Begin typing your search above and press return to search.

பிரிட்டனில் பயங்கரம்: தொகுதி மக்களை சந்தித்தபோது எம்.பி.யை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்!

பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் பயங்கரம்: தொகுதி மக்களை சந்தித்தபோது எம்.பி.யை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர்!

ThangaveluBy : Thangavelu

  |  16 Oct 2021 2:36 AM GMT

பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ் 69, எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 1997 முதல் தொடர்ந்து 7 முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளார்.


இந்நிலையில், நேற்று (அக்டோபர் 15) தனது தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தபோது, அங்கிருந்து இளைஞர் ஒருவர் டேவிட்டை கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த டேவிட்டை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே எம்.பி.யை குத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக எம்.பி.யை கொன்றார் என்பது விசாரணை முடிவிற்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் பிரிட்டன் எம்.பி.களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: The Week


Next Story
கதிர் தொகுப்பு
Trending News