Kathir News
Begin typing your search above and press return to search.

உலகில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து கவலைப்படும் ஐ. நா!

காலநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஐக்கிய நாடுகள் சபை.

உலகில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து கவலைப்படும் ஐ. நா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Aug 2021 1:27 PM GMT

உலகில் தற்போது உள்ள இந்த நோய்த் தொற்றுகளுக்கு இடையிலும், பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் வெளிவந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதற்கு உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல்மட்டம் உயர்ந்ததுமே காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே கால மாற்றம் பூமியையும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு வெகுவாக பாதிக்கும் என்பதும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.


இந்நிலையில் இவைகள் எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை, ஐ.நா. காலநிலை அறிவியல் குழு தனது அறிக்கையை இன்று வெளியிட்டு உள்ளது. இரண்டு வாரமாக இணைய வழி மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு காலநிலை மாற்றம் குறித்து ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அரசுக் குழுவுக்கு, 195 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. கடந்த காலம் மற்றும் எதிர்கால காலநிலை மாற்றம் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.


காலநிலை மாற்றம் எவ்வளவு? மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அறிக்கை விரிவாக பேசவுள்ளது. இந்த வருடம் இந்தியா, சீனா, வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Input: https://www.indiatoday.in/science/story/un-science-panel-to-release-key-report-climate-change-1838524-2021-08-09

Image courtesy: India Today


Next Story
கதிர் தொகுப்பு
Trending News