Kathir News
Begin typing your search above and press return to search.

14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த 27 ஆயிரம் கோடி திட்டம் - மோடி அரசு ஒப்புதல்

27 ஆயிரம் கோடி செலவில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது

14 ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்த 27 ஆயிரம் கோடி திட்டம் - மோடி அரசு ஒப்புதல்

KarthigaBy : Karthiga

  |  8 Sep 2022 7:15 AM GMT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மதிய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அவர் கூறியதாவது :-


நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14000 மேற்பட்ட பள்ளிகள் 'பிரதமர் -ஸ்ரீ'பள்ளிகளாக உருவெடுக்க தரம் உயர்த்தப்படும். அதற்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகள் இதில் சேர்க்கப்படும். இதற்கான மொத்த செலவு ஐந்து ஆண்டுகளுக்கு 27,360 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்கு 18,128 கோடி.


இத்திட்டால் ஒரு கோடியை 87 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள். ரயில்வே நிலத்தை பிரதமரின் கதிசக்தி திட்டத்துக்காக நீண்ட கால குத்தகைக்கு விடும் கொள்ளைக்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. தற்போதைய ஐந்து ஆண்டுகளுக்கு பதிலாக 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்த நிலங்களில் 300 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.


இதன் மூலம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். கேரள மாநிலம் கொச்சியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. 11 கிலோமீட்டர் தூரத்துக்கு 1,957 கோடி செலவில் இத்திட்ட மேற்கொள்ளப்படும் .இந்த வழித்தடத்தில் 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News