Kathir News
Begin typing your search above and press return to search.

மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் சென்று ஆய்வு

தமிழகத்தில் மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகளை இன்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.

மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நேரில் சென்று ஆய்வு

KarthigaBy : Karthiga

  |  7 Dec 2023 7:30 AM GMT

மிக்ஜம் புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு இயந்திரம் முடிக்கி விடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்ய உள்ளது. மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்னைக்கு இன்று வருகிறார். தமிழக நிதித்திரை அமைச்சர் தங்கம் தென்னரசு , தலைமைச் செயலாளர் சீதாஸ் மீனா ஆகியோர் அவர்களுடன் செல்கின்றனர்.


மத்திய செய்தி ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் அவர்களுடன் செல்கிறார். பின்னர் ஐ.என்.எஸ் அடையாறில் ஹெலிகாப்டர் இயங்குகிறது. அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகிறார். பிற்பகல் 1.20 மணியிலிருந்து 1.30 மணி வரை முதல் அமைச்சர் மு. க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.


பின்னர் 1.30 மணி முதல் 2 மணி வரை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் தலைமைச் செயலகத்தில் வீடியோ பட காட்சி காட்டப்படுகிறது. பின்னர் தலைமைச் செயலகத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புறப்பட்டு 2:30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார்.அங்கிருந்து அவர் 2.40 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மாலை 5:25 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News