Kathir News
Begin typing your search above and press return to search.

வாகனப் பேரணியில் பங்கேற்கும் மத்திய மந்திரிகள் அமித்ஷா ,நிர்மலா சீதாராமன் -தமிழ்நாட்டுக்கு வருகை!

தமிழ்நாட்டுக்கு மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று வருகிறார்கள். இருவரும் வாகன பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்கள்.

வாகனப் பேரணியில் பங்கேற்கும் மத்திய மந்திரிகள் அமித்ஷா ,நிர்மலா சீதாராமன் -தமிழ்நாட்டுக்கு வருகை!

KarthigaBy : Karthiga

  |  12 April 2024 11:40 AM GMT

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பா ஜனதா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .மீண்டும் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார். இதற்கு இடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று தமிழகம் வருகிறார்கள். மதுரை காரைக்குடி ஆகிய இடங்களில் நடக்கும் வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகளும் நடந்து வந்தன. மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் மதுரை நிகழ்ச்சி நிரலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர் .அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடக்கிறது. இதனால் பாதுகாப்புக்கு காரணங்களை காட்டி மத்திய மந்திரி அமித் ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது தள்ளி வைக்கப்பட்டது .

ஆனால் இன்று மாலை 6. 15 மணியளவில் அமித்ஷா பங்கேற்கும் வாகன பேரணி மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அந்த பேரணி ஜான்சி ராணி பூங்கா , நகைக்கடை பஜார் வழியாக சென்று மதுரை ஆதீனமடம் அருகே நிறைவடைகிறது. பின்னர் அந்த பகுதியில் சிறிது நேரம் வாக்கு சேகரிப்பில் அமைதியாக ஈடுபடுகிறார் .பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு புறப்படுகிறார் என்று பா ஜனதா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவை ஆதரித்த இன்று மாலை காரைக்குடியில் நடக்க இருந்த வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்கிறார் என்று கூறப்பட்டது. இதற்காக அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா பங்கேற்க இருந்த வாகன பேரணி திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதே போல நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் சிதம்பரம் சென்று பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு இன்னைக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர் அந்த தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் முருகானந்தத்துக்கு ஆதரவாக வாகன பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார் .நாளை கோவை அவிநாசியில் காலை 10:30 மணிக்கு தன்னார்வலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார் .அப்போது நீலகிரி வேட்பாளரும் மத்திய இணை மந்திரியுமான வேல் முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார் .

பின்னர் மாலை 4 மணிக்கு கோவை சென்று வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பத்தாயிரம் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட வாகன பேரணியில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ச்சியாக தொண்டாமுத்தூர் செல்கிறார் .அங்கு அறிவுசார் பிரிவினருடன் கலந்துரையாடுகிறார். அப்போது பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் கே.வசந்தராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் .இதை தொடர்ந்து தமிழகத்தில் தன்னுடைய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News